வினைப் பயனை வெல்ல முடியாது !
----------------------------------------------------------------------------------------
நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ்
மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம்
நூற்றாண்டிற்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !
---------------------------------------------------------------------------------------
பாடல் (37) வினைப் பயனை வெல்வதற்கு !
----------------------------------------------------------------------------------------
வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனத்தாய நூலகத்தும் இல்லை – நினைப்பதெனக்
கண்ணுறுவ தல்லால் கவலைப்படேல்
நெஞ்சேமெய்
விண்ணுறுவார்க் கில்லை விதி !
--------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
---------------------------------------------------------------------------------------
வினைப் பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்து ஆய நூல் அகத்தும் இல்லை – நினைப்பது எனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப் படேல்
நெஞ்சேமெய்
விண் உறுவார்க்கு இல்லை விதி !
---------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்;
----------------------------------------------------------------------------------------
வினைப்பயனை வெல்வதற்கு = இரு வினைப் பயனை வெல்வதற்கு (உபாயம்) ; வேதமுதலாம் அனைத்து ஆயநூல் அகத்தும் இல்லை = வேத முதலாகிய எல்லா நூல்களையும் கற்பதன் கண்ணும் இல்லை ; (எனினும்) நெஞ்சே = மனமே ; கவலைபடேல் = கவலை உறாதே ; மெய் வினை உறுவார்க்கு = மெய்யாகிய வீட்டு நெறியில் நிற்பவர்க்கு ; நினைப்பது எனக் கண் உறுவது அல்லால் = (அவர்) நினைப்பது போலத் தோன்றுவது அல்லாமல் ; விதி இல்லை = ஊழ் இல்லையாம் !
-------------------------------------------------------------------------------------
பொருளுரை:
---------------------------------------------------------------------------------------
செய்த தீவினைகளின் பயனைத்
துய்த்திடாமல் (அனுபவிக்காமல்) இருப்பதற்கு ஏதேனும் வழிகள் உண்டா என்று கேட்டால், இல்லை
என்பதே விடை !
வேதம் முதலான அனைத்து நூல்களிலும் இந்தக்
கேள்விக்கு விடை இல்லை என்பது அறுதியிட்ட உண்மை !
நெஞ்சே! நீ வினை வலிமையை வெல்ல
நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவ்வளவுதான் உன்னால் முடியும் !
நல்லறங்கள் ஆற்றி, நல்வினைகள் புரிவதனால் விண்ணுலகம் செல்பவர்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை நீ புரிந்து கொள்
------------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
-----------------------------------------------------------------------------------------
நல்வினைகள் ஆற்றி விண்ணுலகம்
செல்பவர்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது !
------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”நல்வழி” வலைப்பூ,
[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 20]
{04-01-2022}
------------------------------------------------------------------------------------------